Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 5, Verse 10

ப்3ரஹ்மண்யாதா4ய க1ர்மாணி ஸங்க1ம் த்1யக்1த்1வா க1ரோதி1 ய: |

லிப்1யதே1 ந ஸ பா1பே1ன பத்3மப1த்1ரமிவாம்ப4ஸா ||10||

ப்ரஹ்மணி—--கடவுளுக்கு; ஆதாய—--அர்ப்பணித்தல்; கர்மாணி--—அனைத்து செயல்களும்; ஸங்கம்—--பற்றுதல்; த்யக்த்வா—--கைவிடுதல்; கரோதி—--செய்கிறவர்; யஹ--—யார்; லிப்யதே—சிக்கிக் கொள்கிறார்; ந—ஒருபோதும் இல்லை; ஸஹ---—அந்த நபர்; பாபேன—--பாவத்தால்; பத்ம-பத்ரம்—--ஒரு தாமரை இலை; இவ--—போன்ற; அம்பஸா—--நீரால்

Translation

BG 5.10: தாமரை இலை தண்ணீரால் தீண்டப்படாதது போல, எல்லாப் பற்றுகளையும் விட்டுவிட்டு, தங்கள் செயல்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள், பாவத்தால் தீண்டப்படாமல் இருப்பார்கள்.

Commentary

இந்து மற்றும் பௌத்த நூல்கள் இரண்டிலும் தாமரைப்பூவின் ஒப்புமைகள் ஏராளமாக உள்ளன. கடவுளின் தெய்வீக உடலின் பல்வேறு பகுதிகளை விவரிக்கும் போது இந்த வார்த்தை மரியாதைக்குரிய பெயராக பயன்படுத்தப்படுகிறது. எனவே சரண்-கமல் என்றால் 'தாமரை போன்ற பாதங்கள்', கமலேக்ஷணம் என்றால் 'தாமரை போன்ற கண்கள்', கர்-கமல் என்றால் 'தாமரை போன்ற கைகள்', போன்ற மற்றும் பல ஒப்புமைகள் உள்ளன.

தாமரை மலரின் மற்றொரு சொல் பங்கஜ், அதாவது 'சேற்றிலிருந்து பிறந்தது'. தாமரை மலர் ஏரியின் அடிப்பகுதியில் காணப்படும் சேற்றில் இருந்து வளர்கிறது, ஆனால் அது தண்ணீருக்கு மேலே உயர்ந்து சூரியனை நோக்கி மலரும். எனவே, தாமரை பெரும்பாலும் ஸமஸ்கிருத இலக்கியங்களில் அழுக்குக்கு மத்தியில் பிறந்து அதற்கு மேல் உயரும் அதே சமயத்தில் அழகான தூய்மையை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு உதாரணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. .மேலும், தாமரை செடியில் பெரிய இலைகள் உள்ளன, அவை ஏரியின் நீர் மேற்பரப்பில் மிதக்கின்றன. தாமரை இலைகள் இந்திய கிராமங்களில் நீர்ப்புகாதட்டுக்ககளாக பயன்படுத்தப்படுகின்றன; தாமரை இலைகளின் மீது ஊற்றப்பட்ட திரவம் ஊறாமல் வெளியேறுகிறது. தாமரை இலையின் அழகு என்னவென்றால், தாமரை தண்ணீருக்குப் பிறப்பு, வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்திற்கு கடன்பட்டாலும், தன் இலைகளை நனைக்க அனுமதிக்காது. தாமரை இலையில் ஊற்றப்பட்ட தண்ணீர் அதன் மேற்பரப்பில் வளரும் சிறிய முடி காரணமாக பக்கவாட்டில் ஓடுகிறது.

தாமரை இலையின் அழகிய ஒப்புமையின் உதவியுடன், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், தாமரை பூ எவ்வாறு ஏரியின் மேற்பரப்பில் மிதந்தாலும் தண்ணீரில் நனைய அனுமதிக்காதது போல, அதே போல், கர்ம யோகிகள் அனைத்து வகையான வேலைகளை செய்தாலும் அவை தெய்வீக உணர்வில் செய்யப்படுவதால் அவர்கள் பாவத்தால் தீண்டப்படாமல் இருக்கிறார்கள்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
5. கர்ம ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!